Friday, January 12, 2007

இது என்ன அதிசயம்


உன்னைக் கண்டதும் - என்
கண்கள் இமைக்க மறுக்கின்றன என்கிறாய்.
அடி போ இது என்ன அதிசயம்
உன்னைக்கண்டதும் என் இதயமே
துடிப்பதில்லை.

தொடரும் காத்திருப்பு...


எனக்கு அழகிருந்தும் என்ன செய்ய
தனிமையிலே அழத்தான் முடிகிறது,
எதிர் பார்த்திருப்பதுபோல் - ஒருத்தி
வந்திடுவாள் என காத்திருப்பு தொடர்கிறது.

நாம் தீட்டிய ஓவியம்


நீ வரைந்த கற்பனை காதலன் போல் நானும்
நான் வரைந்த சொப்பன காதலிபோல் நீயும்
இருப்பதால் பற்றிக்கொண்டன நம் கைகள்
வாழ்க்கைப்பாதையில் பயணிப்பதற்காய்....

ச்சீ... பார்


அழகிய ஆற்றங்கரை ஓரத்திலே - உள்ள
ஆலமரம் மேல் நாம் அழகிய வீடமைத்து
சத்தமில்லாமல் பரிமாறும் காதல் முத்தங்களை
சந்திரனும் எட்டிப்பார்க்கிறான் பார். ச்சீ.........

தனிமையானவள்

ஆயிரம் தோழிகள் எனக்கு உண்டு் - எனினும்
நான் சிவப்பு ரோஜா கொடுத்த முதல் தோழி நீ.